சென்னை: தியாகராய நகர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தியாகராய நகர் கோட்டத்திற்கு நுங்கம்பாக்கம் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.