டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், இன்று மக்களவை கூடியவுடன் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.