டெல்லி: ஒன்றிய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாவதாக சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கூறினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்எஸ் நப்பினை எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் ராஜேஷ் பந்த் பேசுகையில், ‘ஆன்லைன் நிதி மோசடி தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒன்றிய அரசின் சைபர் கிரைம் போர்டல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒரு நாளைக்கு 3,500 நிதி மோசடி புகார்கள் பதிவாகிறது.