சென்னை: தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் குடோன் ஒன்றில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 26 பட்டுப்புடவைகளை திருடி சென்ற செக்யூரிட்டியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் திருமண பட்டுச்சேலைகள் விற்பனை செய்யும் பிரபல ஜவுளிக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் குடோன் கடையின் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று காலை குடோனில் இருந்து ரூ.28 மதிப்புள்ள 26 விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கடையின் நிர்வாகம் சார்பில் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபல ஜவுளிக்கடையின் குடோனில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.