அம்பத்தூர். அம்பத்தூர் சிறார் மன்றத்தில், சதுரங்க பயிற்சி பட்டறையை காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய சிறார் மன்றத்தில், சதுரங்க விளையாட்டு பயிற்சி பட்டறையை தமிழக காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று தொடங்கி வைத்து பேசுகையில்,