திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரே, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கடந்த 2014ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில், தனியார் தொண்டு நிறுவனம் பயோ காஸ் தயாரிப்பு மையத்தை தொடங்கியது. சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலையில் இருந்து உணவு கழிவுகளை இங்கு கொண்டு வந்து, அதிலிருந்து நவீன முறையில் காஸ் உற்பத்தி செய்து, சப்ளை செய்யப்பட்டது. இதனை, கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனமே இதை பராமரித்து வந்தது. அதன் பின்னர் இந்த பயோ காஸ் மையம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், ஒருசில மாதங்கள் செயல்பட்ட இந்த பயோ காஸ் மையம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று செயல்படாமல் நிறுத்தப்பட்டது.