டெல் அவிவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், ஓராண்டை நெருங்கி உள்ளது. இந்த போரின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட், இரு நாடுகள் இடையே சமாதானம் பேசி வந்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் போர் உச்சத்தில் இருந்த போது, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த மேற்கத்திய நாடுகளின் தலைவர்களில் நப்தாலி பென்னட்டும் ஒருவராவார்.