செய்தி மக்கள் தொடர்புத் துறை தயாரித்த இலக்கிய மலர் 2023 வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: செய்தி மக்கள் தொடர்பு துறை தமிழரசு இதழின் சார்பில், தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு மாத இதழ், அரசின் சாதனைகளை சொல்வது மட்டுமில்லாமல் சமகால இலக்கியங்களைக் காத்து வளர்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, பண்பாடு, சமூக வளர்ச்சி போன்றவற்றை எடுத்துச்சொல்லும் விதமாக இந்த இலக்கிய மலரினை படைத்துள்ளது. இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் விதமாக இம்மலரில் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளார்கள்.

மேலும், அறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், விமர்சகர்கள், ஓவியர்கள் போன்றவர்களின் எழுத்தும், இலக்கியமும், அவர்களின் ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் இன்றைய இலக்கிய உலகத்தில் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் இலக்கிய மலர் 2023 உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Related Stories: