சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை கொடுங்கையூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எம்.ஆர்.நகர் அழகேசன் தெருவில் உள்ள வங்கியில் இன்று காலை தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. யுபிஎஸ் கருவியில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியது. வங்கியில் இருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் காவலாளி உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தந்துள்ளார்.

Related Stories: