புதுடெல்லி: இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே கடனில் தத்தளித்து வருகிறது. இந்நிறுவனம், அலைக்கற்றைக்கான தவணை மற்றும் ஏஜிஆர் கட்டணத்திற்கான வட்டி தொகையாக ரூ.16,133 கோடியை ஒன்றிய அரசுக்கு வழங்க வேண்டி உள்ளது. இந்த வட்டி நிலுவைத் தொகைக்கு பதிலாக நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக் கொள்ள ஒன்றிய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் முன்வந்தது. இதற்கு வோடபோன் ஐடியா நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.