பெங்களூரு: காங்கிரஸ் தலைமையிடம் உள்ள உறவை கெடுக்கும் வகையில் போலி கடிதம் எழுதும் நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தனது பெயரில் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி, தனக்கும் தலைமைக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கடிதத்தின் நகலை வெளியிட்டு மேலும் அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமைக்கு நான் எந்தவொரு கடிதத்தையும் எழுதவில்லை. எனக்கும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும், தேசிய தலைமைக்கும் இடையே உள்ள உறவை கெடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.