டெல்லி: அன்னைத் தமிழ் நிலத்திற்குப் பெயரை மீட்டளித்தவரின் நினைவாக என்றும் மிளிர்கிறது நம் தமிழ்நாடு என அண்ணா நினைவு நாளையொட்டி கனிமொழி எம்பி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணிக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்நிலையில் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாளை முன்னிட்டு, டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக எம்.பி., கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.