சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி ஒடிசா எப்சி அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இதுவரை 15 போட்டிகளில் ஆடி உள்ள சென்னையின் எப்சி 4 வெற்றி, 5 டிரா, 6 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னையின் எப்சி அணி உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நெதர்லாந்தை சேர்ந்த நாசர் எல் கயாதி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளார்.