டெல்லி: புதிய வருமானவரி கணக்கீட்டு முறையை மூடியிருந்த திரை மெல்ல விலகுவதால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வருமான வரி கணக்கீடு தொடர்பாக நாளிதழ்களில் வந்துள்ள பட்டியலை பகுத்தாய்ந்து முடிவு செய்ய பா.சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார். ஆண்டு வருமானம் ரூ.35 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பழைய வரி கணக்கீட்டு முறையே பயன் தருவதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2 கோடி வரை இரு கணக்கீட்டு முறையிலும் வேறுபாடு இல்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் கூறியுள்ளது.