வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஆலோசனை இன்று வேலூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒருபகுதியாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன், அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சரின் கள ஆய்வில் கிடைத்த தகவல் அடிப்படையில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.