வேலூரில் உள்ள அரசு பள்ளியில் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளை நேரடியாக ஆய்வு செய்யும் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆய்வு செய்தார். சத்துவாரி வள்ளலாரின் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், வேலூர் மாநகர பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து சத்துவாரி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில் மாணவர்களின் வருகை பதிவேட்டை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர், மாணவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார். இதை தொடர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளிக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை நேர உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.

Related Stories: