சத்தியமூர்த்திபவனில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு

சென்னை: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் லேப்டாப் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்த ஆவணப்படத்துக்கு தடைவிதித்த ஒன்றிய அரசை கண்டித்து பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், போலீசார் அனுமதி வழங்காததால் சத்தியமூர்த்தி பவனில் ஆவணப்படத்தை ஒளிபரப்பினர். இதை தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோபண்ணா, மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, மண்டல ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பாரதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பார்த்தனர். இதுகுறித்து, மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி கூறுகையில், ‘‘பேரணி நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் லேப் டாப் மூலம் சத்தியமூர்த்தி பவனில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்துள்ளோம். ஆங்கிலத்தில் உள்ள இந்த ஆவணபடத்தை தமிழில் டப் செய்து ஒளிபரப்ப உள்ளோம்’’ என்றார்.

Related Stories: