சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் அளித்துள்ளது. மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வறிக்கைக்காக காத்திருக்கிறோம் என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.