அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மனநோயாளியை பத்திரமாக மீட்ட போலீசார், இதுதொடர்பாக, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் 40 அடி உயர சுவர் மீது, நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அமர்ந்துகொண்டு குதிக்கப்போவதாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார், அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரியவந்தது.