சென்னை: மந்தைவெளி லாசர் சர்ச் சாலையை சேர்ந்தவர் சண்முகநாதன் (81). இவரது வீட்டு பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் மட்டும் மாயமாகி இருந்தது. எனவே, வீட்டில் வேலை செய்யும் பெண் ஜானகி மீது சந்தேகம் உள்ளதாக சண்முகநாதன் கடந்த 29ம் தேதி பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.