அண்ணாநகர்: முகப்பேர் மேற்கு ஐஸ்வந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40), ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று காலை அவரது அலுவலகத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செந்தில்குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அலுவலகத்துக்கு விரைந்து வந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.3.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து, செந்தில்குமார் நொளம்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.