ஈரோடு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி: தமிழகத்தில் மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடம், மருத்துவக்கல்லுாரிகளில் டீன் பணியிடம் நிரப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அவருக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என நினைக்கிறேன். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லை என்று அவர் சொன்னால், அவருக்கும், கவர்னருக்கும்தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே அவர், கவர்னரிடம் சென்று கேட்க வேண்டியதுதானே. எந்த மருத்துவமனையில், எந்த மருந்து இல்லை என பன்னீர்செல்வம் கூறினால், உடனடியாக அம்மருந்தை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.