பெரம்பூர்: பெரம்பூரில் 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் 1 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் தலா 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.