திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளம் அருகில், வடக்கு மாட வீதியில் உள்ள சிறுவர் பூங்கா பழுதடைந்து, பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, சென்னை மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், சிறுவர்களுக்கான சுழல் நாற்காலி, ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்களுடன் சிறுவர் பூங்காவை சீரமைக்கப்பட்டது.