புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழமையான 9 லட்சம் அரசு வாகனங்களை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டில் இருந்து நீக்கப்படும். அவைகளுக்கு பதிலாக, மாற்று எரிசக்தியில் இயங்கக் கூடிய புதிய வாகனங்கள் கொண்டு வரப்படும்.