எடப்பாடியை சந்திக்க செல்கிறேனா? தேமுதிக எல்.கே.சுதீஷ் விளக்கம்

சென்னை: தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்திக்க செல்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் வருகிற 1ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இவ்வாறு சுதீஷ் கூறி உள்ளார்.

Related Stories: