லாகூர்: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 33 தொகுதிகளிலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாக் கட்சி அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் 33 நாடாளுமன்ற தொகுதிகளில் மார்ச் 16ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வெள்ளியன்று அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தெக்ரின் இ இன்சாப் கட்சியின் துணை தலைவர் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று முன்தினம் லாகூரில் நிருபர்களை சந்தித்தார்.