ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட நாராயணவலசு பகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தொகுதி மக்களிடையே எழுச்சியை காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்காக இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டங்கள் எல்லாம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.