தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஞாயிற்று கிழமையும் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி காரணமாக வழக்கத்தை விட மேட்டூர் அணை மே மாதம் 24-ம் தேதியே திறக்கப்பட்டது. இதனால், குருவை சாகுபடி அமோகமாக நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மூன்றே முக்கால் லட்சம் ஏக்கரில் சம்பா சாலடி சாகுபடி செய்யப்பட்டது. தங்குதடையின்றி காவிரி நீர் கிடைத்ததால் சம்பா பயிர்கள் நன்றாக விளைந்து கூடுதல் மகசூலுடன் விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.