இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி ஆகியவை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 200 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை பெறுவதற்கு பாகிஸ்தான் முயன்று வருகிறது. பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை மிக பெரிய அளவுக்கு உயர்ந்துள்ளது நாட்டின் அன்றாட வாழ்க்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது.