துபாய்: ஈரான் நாட்டில் உள்ள ராணுவ தொழிற்சாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் மத்திய நகரமான இஸ்பகானில் ஈரான் நாட்டின் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன்மீது நேற்று முன்தினம் இரவு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.