ராஜீவ்காந்தி சாலையில் ஓடும் காரில் தீ: போக்குவரத்து பாதிப்பு

துரைப்பாக்கம்: ராஜீவ்காந்தி சாலையில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விபத்தில் கார் முழுமையாக எரிந்து சேதமானது.

சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (38). இவர் நேற்றிரவு சோழிங்கநல்லூரில் தனது காரை சர்வீஸ் முடித்து வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். இவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது, ஓடிக்கொண்டிருந்த காரின் முன்பகுதியில் கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில் பிரசாந்த் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் துரைப்பாக்கம் தீயணபை்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, காரில் பரவிய தீயை முற்றிலும் அணைத்தனர். இவ்விபத்தில் அந்த கார் முழுமையாக எரிந்து சேதமானது. இப்புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவினால் கார் தீப்பிடித்ததா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: