சென்னை: மக்கள் நீதி மய்யம் இணையதள பக்கம் ’ஹேக்’ செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மநீம சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி மக்கள் நீதி மய்யம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் வரும் 30ம் தேதி இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் விஷமிகளால் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்டவர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்” என மக்கள் நீதி மய்யம் தெரிவித்திருந்தது.