ஜெருசலேம்: ஜெருசலேம் ஜெப ஆலயத்திற்கு வெளியே மர்ம நபர் நடித்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 70 வயது மூதாட்டி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மோதலில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, தாங்கள் எந்த அப்பாவியையும் கொல்லவில்லை என்றும், இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதப் படையைப் பிடிக்க ஜெனினுக்குச் சென்றோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.