திருவொற்றியூர்: மாதவரம், மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (37). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி இவர் பார்லர் கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரம் திருடு போனதாக மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பால்பண்ணை குற்றப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து, பியூட்டி பார்லரில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஜல்லடியன்பேட்டை, வீராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த டெய்சி (எ) சின்னு (40) என்பவர் திருடியது தெரிந்தது.