நீலகிரி: குன்னூர் நகராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது தொடர்பாக நகராட்சி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. குன்னூர் நகராட்சியில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் உழவர் சந்தை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டது குறித்து மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். நகராட்சி தலைவரின் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதாகவும் இதில் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு இருப்பதாகவும் உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.