திடீர் உடல் நலக்குறைவு: நாஞ்சில் சம்பத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

நாகர்கோவில்: திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக் காவிளை பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திராவிட இயக்க பேச்சாளர். சமீபத்தில் அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவ்வப்போது வலிப்பு, ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சை களையும் நாஞ்சில் சம்பத் பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவில் புறப்பட்ட நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரயிலில் மயங்கினார். உடனே அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவர் சுயநினைவின்றி இருப்பதாக டாக்டர்கள் கூறினர். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் உள்ளிட்ட திமுகவினர் சென்று நாஞ்சில் சம்பத் உடல் நலம் குறித்து விசாரித்தனர். நாஞ்சில் சம்பத்தை, குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.

Related Stories: