செய்யூர்: செய்யூர் அருகே நேற்று மாலை ஒரு பள்ளி வாகனம் சாலையோர மின்கம்பத்தின்மீது மோதியது. இதில், அந்த வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். செய்யூர் அருகே கடப்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 20க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் கிளம்பியது. இந்த பள்ளி வாகனம் இசிஆர் சாலையில் இருந்து விளம்பூர் நோக்கி சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.