பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் அணி பேரவை தலைவர் தனியரசு: சந்திப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அணியாக இருக்கக்கூடிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இரண்டு அணிகளும் தங்களுடைய கூட்டணிக்கட்சியாக தொடர்ச்சியாக சந்தித்து இந்த ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர். அந்தவகையில்  

கொங்கு இளைஞர் அணி சார்பாக தற்போது இந்தசந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டு இருக்கிறது.

இதற்குமுன்பாக கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனியரசு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருந்தது, அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக இந்த இருஅணிகளும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரண்டு அணிகளுக்கும் தற்போது ஓபிஎஸ் அணிகளுக்கு தொடர்ச்சியாக தனியரசு ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பானது தற்போது நடைபெற்று வருகிறது சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கக்கூடிய அவருடைய இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது, ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஓபிஎஸ் சார்பிலும் அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டதாகவும் தனியரசு தரப்பில் தானாக முன்வந்து சந்தித்திருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு அளிக்கிறாரா அல்லது அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்து ஆதரவு அளிக்கிறார்களா என்று இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என செய்தி வெளியாகியுள்ளது.    

Related Stories: