சென்னை: ஜி20 மாநாடு எதிரொலியாக, மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபாதை சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக, 20 நாட்டு பிரதிநிதிகள் வரும் ஜனவரி 30ம் தேதி சென்னை வருகின்றனர். மேலும், ஜி20 பிரதிநிதிகள் அடுத்த மாதம் பிப்ரவரி 1ம்தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிடுகின்றனர்.