இடைத்தேர்தலில் தமாகா ஆதரிப்பவர்தான் வெற்றி பெறுவார் ஜி.கே.வாசன் கிச்சுகிச்சு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அளித்த பேட்டி: கூட்டணியில் முதன்மை கட்சியாக உள்ள அதிமுகவிடம் கலந்து பேசி, ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல முடிவை எடுத்தோம். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழல் தமாகாவின் முடிவு எங்களுடைய வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம். ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினாலும், அனைத்து கட்சிகளும் எதிர்த்து நின்றாலும், அதிமுக, தமாகா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். பாஜக எங்களோடு இருக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: