சென்னை: தனியார் நிறுவனங்களின் பால் விலை உயராமல் இருக்க, ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவரது அறிக்கை: பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஆகியவற்றை காரணம் காட்டி பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.