சாகர்: மத்திய பிரதேச அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை எலிகள் கடித்து தின்றுவிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை காணவில்லை என்ற புகார் வந்துள்ளது. மாயமான கண்களை எலிகள் தோண்டி எடுத்து சாப்பிட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் கண்களை எலிகள் கடித்து தின்ற சம்பவம் நடந்துள்ளது. அதனால் மீண்டும் அதே மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.