சென்னை: சமீப காலமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது குறித்து புகார் கூறப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவது தொடர்பாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதன் அடிப்படையில், அமைச்சர் சிவசங்கர் உத்தரவின்படி சாலையோர உணவகங்களின் செயல்பாட்டினை கடந்த 2 நாளாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் (19ம் தேதி) போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் சாலையோர உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.