சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையொட்டி, பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்த வருகிற 23ம் தேதி மாலை சென்னை, எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டியுள்ளார். இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார்.