சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.