சென்னை: ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், ஃப்ளெக்ஸ், சால்காம்ப் உள்ளிட்ட பல உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.1,588 கோடி மதிப்பிலான முதலீட்டில் சென்னைக்கு அருகில் உள்ள பெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. இதில் புதிய எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு தமிழ்நாட்டில் நுழைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜப்பானிய எலெக்ட்ரிக் நிறுவனமான மிட்சுபிஷி தனது முதல் தொழிற்சாலையை இந்தியாவில் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்துள்ளது.