இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக இந்தியா -பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினர் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா முன்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துபாயை சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் தீவிரமான மற்றும் உண்மையான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இந்தியாவுடன் மூன்று போர்கள் ஏற்பட்டுள்ளன.