திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரு வருடங்களுக்கு முன் நாடு முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைப்பிடிப்பது உள்பட கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.