சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் தினமும் இரவில் கருப்பன் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. விவசாயிகள்கோரிக்கையை ஏற்று கருப்பன் யானையை பிடிக்க கபில்தேவ், முத்து, கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகளை வனத்துறையினர் அப்பகுதியில் நிறுத்தினர். மேலும் டிரோன் மூலம் கண்காணித்தனர். 2 நாட்களுக்கு முன் கருப்பன் யானை இரிபுரத்தில் ஒரு விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பசு மாட்டை தாக்கி காயப்படுத்தியது. நேற்று அதிகாலை இரிபுரம் பகுதியில் விவசாய தோட்டத்திற்கு மீண்டும் வந்த கருப்பன் யானையை வனக் குழுவினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர். மயங்கி விழும் என காத்திருந்த வேளையில், திடீரென வனப்பகுதிக்குள் ஓடி தப்பியது.